ஜெயலலிதா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன். விஜயதரணி ஆவேசம்

ஜெயலலிதா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன். விஜயதரணி ஆவேசம்
vijayatharani- jaya long
தமிழகத்தில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயதாரணி, ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்யவுள்ளார் என்றும் அதற்கு முன்பாக அவர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மன்னிப்பு கேட்கும்வரை ஓயமாட்டேன்’ என்றும் விஜயதரணி ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 2வது மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமார், நடிகை குஷ்பு, விலவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய விஜயதாரணி, “கடந்த 9-ம் தேதி அதிமுக நாளிதழில் ‘சாட்டை’ என்ற பெயரில் என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன்” என்று ஆவேசத்துடன் கூறினார்.

Leave a Reply