சி.பி.எஸ்.இ.: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்

cbse-results-2013_350_053014042849-11

சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத் தேர்வு  தொடங்குகிறது.

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 22–ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு நாளை ஆரம்பித்து மார்ச் 28–ல் நிறைவடைகிறது.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் தீவு உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 2150 பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வையும், 57 ஆயிரம் பேர் பிளஸ்-2 தேர்வையும் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டைனமிக் ரீடெய்ல் மற்றும் இந்திய சுற்றுலா, பாதுகாப்பு, ஐடி உள்ளிட்ட பத்து விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

Leave a Reply