பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் மீது குண்டர் சட்டம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டபோது சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜெகதீசன் என்பவர் பெரியார் சிலை மீது தனது காலணியை கழட்டி எறிந்து சிலைக்கு அவமரியாதை செய்தார்.
உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.