சசிகலா, ஓபிஎஸ் இருவரையும் டுவிட்டரில் விளாசிய ஜோதிமணி
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை மட்டுமின்றி முதல்வர் பதவிக்கும் கனவு காணும் சசிகலா குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜோதிமணி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ”தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும்.அவ்வளவு ஏமாளிகளா நாம்?!” என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் முதல்வர் பன்னீர்செல்வம் குறித்த பதிவு ஒன்றில், ‘பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் அவதியுறும் சூழலில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார். அதுபற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை. பிறகெதற்கு முதல்வர்? என்று காட்டமாக பேசியுள்ளார்.
முதல்வர் குறித்தும் சசிகலா குறித்து காங்கிரஸின் முக்கிய தலைவர்களே விமர்சனம் செய்யாத நிலையில் ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.