shadow

மகளிர் உலககோப்பை: இறுதி போட்டியில் இடம் பெறுவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரிட்சை

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்த இங்கிலாந்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply