shadow

குரூப் 4 தேர்வில் குழப்பம்: 4 விடைகளும் தவறாக இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி

நேற்று நடைபெற்ற தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குருப் 4 தேர்வில் கேள்வி ஒன்றுக்கு கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளும் தவறாக இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் எது? என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளில் ஒன்று கூட சரியானது இல்லை. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி ஆகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளிலும் இந்த சரியான பதில் இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாகி தவறான விடையை டிக் செய்தனர். ஒருசிலர் கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தேர்வாணையம் விளக்கமளித்தபோது, ‘குரூப் 4 தேர்வு விடைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம் என்றும், உத்தேச விடை வெளியான பிறகு 7 நாட்களுக்குள் அதில் தவறேதும் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தவறான கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Leave a Reply