shadow

4உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தொடரில் இந்திய அணி நேற்று மலேசிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோதிலும், அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. எனவே ஹாக்கி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

நெதர்லாந்து நாட்டில் தற்போது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது.நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டி ஒன்றில் இந்திய அணி மலேசிய அணியுடன் ஆக்ரோஷமாக மோதி 3-2 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஜாஸ்ஜித் சிங் குலார், ஆகாஷ்தீப் சிங், ஆகியோர் அடித்த அபார கோல்களின் உதவியால் இந்திய அணி வெற்றி பெற்றது.

எனினும் இந்திய அணி பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் தோல்வி அடைந்துள்ளது. ஸ்பெயின் அணியுடன் டிரா செய்துள்ளது. இதனால் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 4வது இடத்தை அடைந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. நாளை இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் இந்திய அணிக்கு 7 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிகள் 9 புள்ளிகள் எடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply