shadow

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கை அணியை வென்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யும்படி கெட்டுக்கொண்டது. இதனால் முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்கார்கள் ராட் மற்றும் மந்தனா 86 மற்றும் 90 ரன்கள் குவித்தனர்.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.

மந்தனா சிறந்த ஆட்டக்காரர் விருதினை பெற்றார்.

Leave a Reply