கார்ப்பரேட் நிறுவனத்திற்கு லஞ்ச் சப்ளை செய்த பெண்ணுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்கள்
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் இயங்கி வந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு தினசரி லஞ்ச் கொடுத்து வந்த ஒரு பெண்ணுக்கு தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து தற்போது அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரிடம் லஞ்ச் வாங்கி சாப்பிட்ட அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த பெண்ணால் எத்தனை பேருக்கு வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஊழியர்கள் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் எண்ணிக்கையில் கூடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.