shadow

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீவைத்த போலீசார் யார்? திடுக்கிடும் தகவல்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக விரோதிகள் போலீஸ் ஸ்டேசன் உள்ளிட்ட பல இடங்களில் தீ வைத்து போராட்டத்திற்கே களங்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஒருசில இடங்களில் போலிசாரே தீ வைத்ததாக டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் வெளிவந்தன.

மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசே ஆட்டோ, குடிசைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்ததற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டங்கள் எழுந்தன. போலீஸ் உயரதிகாரிகளே இந்த தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக அந்த போலீசார்கள் இனம் காணப்பட்டு உரிய நடவடிக்கை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வீட்டிற்கு தீ வைத்த பெண் போலிசும்,ஆட்டோவுக்கு தீ வைத்த ஆண் போலிசும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்களுடைய பெயர்களை வெளியிடாமல் காவல்துறையினர் ரகசியம் காத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் செய்த குற்றத்திற்கு வலுவான வீடியோ ஆதாரங்கள் உள்ளதால், அவர்கள் இடைநீக்கம் செய்யப்படலாம் என காவல்துறையினர்களால் கூறப்படுகிறது.

Leave a Reply