ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: சிக்கலான ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த எய்ம்ஸ் டாக்டர்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. 4 குழந்தைகள் மற்றும் தாய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

பிப்ரவரி இரண்டாம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெண்ணொருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பதை தெரியவந்தது

நான்கு குழந்தைகளையும் வெற்றிகரமாக வெளியே எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை மருத்துவர்கள் புரிந்துகொண்டனர். இருப்பினும் அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் குழு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சிக்கலாக இருந்த குழந்தைகளை எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வெளியே எடுத்தனர்

தற்போது நான்கு குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான ரிஸ்க் உள்ள இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply