அதிமுகவில் இணைகிறாரா தா.பாண்டியன்? அதிர்ச்சியில் மக்கள் நலக்கூட்டணி
அதிமுக, திமுகவுக்கு மாற்று என்று கூறப்பட்டு வரும் ‘மக்கள் நலக்கூட்டணி’ தேர்தல் வரை தாங்காது, உடைந்துவிடும் என ஒருசில அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த போதிலும், தேமுதிக, தமாக இணைந்த பிறகு ஒரு வலிமையான அணியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் தா.பாண்டியன், திடீரென அதிமுகவில் இணையவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி இன்று காலை முதல் பரவி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் தா.பாண்டியனிடம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது உதவியாளர் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தா.பாண்டியன், மக்கள் நலக்கூட்டணிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறினார். இருப்பினும் தா.பாண்டியனிடம் இருந்து நேரடியாக எவ்வித பதிலும் வராததால் இந்த வதந்தி இன்னும் நீடித்து கொண்டே இருக்கின்றது. இதனால் மக்கள் நலக்கூட்டணியின் பிற தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்தாலும் தா.பாண்டியன் கடந்த காலங்களில் அதிமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹருக்கு அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி அளிக்கப்பட்டது என்பதும், தா.பாண்டியனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது வீட்டுக்கே சென்று ஜெயலலிதா வாழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.