shadow

சினிமாவை விட்டு விலக ஏன் முடிவு செய்தேன் தெரியுமா? சமந்தா அதிர்ச்சி தகவல்

samanthaவிஜய்யுடன் ‘கத்தி’ மற்றும் ‘தெறி’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக நடித்த நடிகை சமந்தா ‘தெறி’ படம் தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு விலகியிருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், ஆகிய தொடர் தோல்வி படங்களில் நடித்த சமந்தாவுக்கு கைகொடுத்தது ‘கத்தி’ படமும் ‘தெறி’ படமும்தான். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னர் அவர் ஹிட் பட நாயகி என்றே போற்றப்படுகிறார்.

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் கஷ்டப்பட்டு நடித்திருந்தும் அந்த படம் தோல்வி அடைந்தது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்ததாகவும், அதேபோல் ‘தெறி’ படமும் தோல்வி அடைந்திருந்தால் சினிமாவில் இருந்து விலகிவிட ஆலோசனை செய்ததாகவும் பேட்டி ஒன்றில் சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தா நடிப்பில் விரைவில் ’24’ மற்றும் ‘பிரமோத்சவம்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சமந்தா பிசியான நடிகையாக மாறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Chennai Today News: Will Samantha quit from Cinema?

இந்த செய்தியை படிக்கலையா…தயவு செய்து படித்துவிடுங்கள்...

‘தெறி’ சக்ஸஸ். ஃபேஸ்புக்கில் நன்றி சொன்ன விஜய்

Leave a Reply