சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா முதல்வர் ஜெயலலிதா?
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளை மனுவாக அளித்தார்.
இந்நிலையில் டெல்லி பயணத்தை அடுத்து விரைவில் ஜெயலலிதா சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா உடல்நிலையில் பிரச்சனை இருந்ததாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் தற்போது மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா அல்லது சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்று எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் என்பதால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றால் சிறப்பு வசதிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மாத காலம் ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சை செய்து கொள்வார் என்று தமிழின் முன்னனி இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.