மனைவியின் பேச்சைக் கேட்காமல் வெளியே சென்ற கணவன்: திரும்பி வந்தபோது நேர்ந்த விபரீதம்
உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் தாக்கி வருவதை அடுத்து இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு நேரத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது
இந்த நிலையில் மங்களூர் அருகே அப்பாஸ் என்பவர் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே செல்ல முயன்ற போது அவருடைய மனைவி வெளியே செல்ல வேண்டாம் என்று தடுத்து உள்ளார். இருப்பினும் அவர் மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு வெளியே போனதாகத் தெரிகிறது
இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பிய அப்பாஸ்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது பேச்சை கேட்காமல் வெளியே கணவன் சென்றதால் மனமுடைந்த மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் பேச்சைக் கேட்டு வீட்டில் இருந்திருக்கலாமே என்று அப்பாஸ் கதறி அழுத காட்சி அந்த பகுதியில் உள்ளவர்களை கண் கலங்க வைத்தது
Leave a Reply
You must be logged in to post a comment.