என்னையும் கொன்று விடுங்கள்: தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட குற்றவாளியின் மனைவி
டெல்லி திஹார் சிறையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று காலை திட்டமிட்டபடி 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷயின் மனைவி புனிதா தேவி என் கணவர் இறந்துவிட்டார், என்னையும் கொன்றுவிடுங்கள். நான் ஏன் வாழவேண்டும் என்று கூறி சிறையின் முன் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் எனது கணவர் அப்பாவி, என்றும்,நான் ஒரு விதவையாக எனது வாழ்க்கையை தொடர விரும்பவில்லை என்றும், எனது கணவர் இறந்துவிட்டால் மனைவியின் நிலை என்ன என்பது இந்த அரசுக்கு தெரியாதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவர் தனது செருப்பைக்கொண்டு தன்னைத்தானே அடித்து பின்னர் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். இந்த சம்பவம் சிறைக்கு வெளியே பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.