shadow

வரதட்சணை கொடுமை என பொய்ப்புகார் அளித்த மனைவி: நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் ஒருவர் புகார் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக வழக்கு பதிவு செய்தார்

இந்த வழக்கை விசாரித்த போது மாமனார் மாமியாரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் வர வேண்டுமென கணவருக்கு அந்த மனைவி டார்ச்சர் கொடுத்ததாகவும் கணவர் அதற்கு உடன்படவில்லை என்பதால் அந்த ஆத்திரத்தில் கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்ததாகவும் தெரியவந்தது

இதனை அடுத்து அந்தப் பெண்ணுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி அவருடைய விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது