1125 கோடி நன்கொடை வழங்கிய பிரபல ஐடி நிறுவனம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதால் அதனை எதிர்த்து போரிட தாராளமாக நிதி வழங்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டதை அடுத்து கோடிக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும் நிதிகள் குவிந்து வருவதை நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம்

டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடி, ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி, கோடக் மஹிந்திரா நிறுவனம் 100 கோடி, அக்ஷய்குமார் 25 கோடி என கோடிகளில் நிதிகள் குவிந்து வரும் நிலையில் தற்போது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ஆயிரத்து 125 கோடி மத்திய அரசுக்கு நிதியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இந்த தொகையானது கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவம் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுவோருக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி அவர்கள் இந்த மிகப்பெரிய தொகையை மத்திய அரசுக்கு நிதியாக வழங்க ஒப்புதல் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply