ரஜினி ரசிகர்களை ஏமாற்றினாரா ‘கபாலி’ தாணு?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க அனைத்து ரஜினி ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில் பலர் இந்த படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முதல் நாள் காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்களை ஆன்லைனில் புக் செய்ய முயன்ற எந்த உண்மையான ரஜினி ரசிகர்களுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. மாறாக ஹாலிவுட் படத்தை மட்டும் பார்த்து ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் வம்பளக்கும் ஐடி ஊழியர்களுக்கு முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஒரு படத்தின் ரிலீஸ் தினத்தில் போஸ்டர் ஒட்டி, கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து, படத்தை முதல் நாளில் பார்த்து பக்காவாக புரமோஷன் செய்யும் உண்மையான ரசிகர்களுக்கு டிக்கெட்டை கொடுக்காமல், மொத்தமாக ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்து மிகப்பெரிய தவறை தாணு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான ரசிகர்கள் பலர் ஆன்லைனில் படத்தை பார்த்துவிட்டனர். மேலும் கம்பெனி கொடுத்த டிக்கெட்டில் ஓசியில் படம் பார்த்தவர்கள்தான் தற்போது இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை இணையதளங்களில் எழுதி வருகின்றனர். எனவே தன் தலையில் தானே படக்குழுவினர் கொள்ளி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை தவறான வழிமுறையை பின்பற்றி சுமாரான வெற்றி படமாக மாற்றிவிட்டனர் என்பது வருத்தத்திற்குரியது.
Leave a Reply
You must be logged in to post a comment.