நடிகை பாவனாவை கடத்தியது இதற்காகத்தான். கைதான சுனில்குமாரின் திகில் வாக்குமூலம்
சித்திரம் பேசுதடி, அசல், ஜெயங்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை பாவனா. இவர் சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். ஆனாலும் இதுகுறித்து அவர் தைரியமாக புகார் செய்ததால் முக்கிய குற்றவாளி சுனில்குமார் உள்பட ஐந்துபேர் இதுவரை கைதாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுனில்குமாரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் கொடுத்த வாக்குமூலம் இதுதான்:
“எனது காதலியை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ நினைத்தேன். அதற்கு பணம் தேவைப்பட்டது. பாவனாவிடம் ஏற்கெனவே ஓட்டுநராக இருந்ததால் அவரிடம் பணம் உள்ள விவரம் தெரியும். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்கலாம் என நினைத்தேன்
சம்பவம் நடத்த இடத்தில் தன்னுடைய செல்போனை சாக்கடையில் எறிந்ததாக வாக்குமூலத்தில் சுனில்குமார் தெரிவித்ததை அடுத்து போலீசார் அவரை அழைத்துக் கொண்டு, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சாக்கடைகளில் செல்போனை தேடினர். ஆனால் செல்போன் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்தில் சுனில்குமாரின் காதலிக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருவதாகவும், தேவைப்பட்டால் அவரையும் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.