shadow

அஸ்வினி கொலையில் நடந்தது என்ன? சூர்யா படத்தை நினைவு படுத்தும் காட்சிகள்

சூர்யா நடித்த உன்னை நினைத்து’ என்ற படத்தில் உள்ள காட்சிகள் போல் அஸ்வினி , அழகேசன் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘உன்னை நினைத்து’ படத்தில் வருவது போல் அஸ்வினியின் படிப்புக்கு அழகேசன் உதவியுள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். ஆனால் அஸ்வினியின் தாயாருக்கு இந்த காதலில் உடன்பாடு இல்லை. அவர் அஸ்வினியின் மனதை மாற்றியதாக தெரிகிறது.

எனவே அழகேசனை அஸ்வினி தவிர்த்து வந்ததாகவும், இதனால் மனம் வெதும்பிய அழகேசன், அஸ்வினியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு தான் நேற்று கல்லூரி வாசலில் காத்திருந்துள்ளார்.

ஆனால் அஸ்வினியை கொலை செய்தவுடன் பொதுமக்கள் அவரை அடித்து உதைத்ததால் அவரால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அஸ்வினி என்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம் என்று கூறப்பட்டாலும் உண்மை காதலை தவிர்த்த வெறுப்பால் அழகேசன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply