‘தெறி’ ரீமேக்கில் நடிக்க போட்டி போடும் 2 பிரபல நடிகர்கள்
இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த ‘தெறி’ திரைப்படம் விஜய் படங்களில் அதிக வசூலை செய்து சாதனை செய்தது. எனவே இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க பலர் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி கைப்பற்றியுள்ளார். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்சயகுமார் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். ஆனால் ரோஹித் ஷெட்டி இந்த படத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திக்கு தகுந்தாற்போல் திரைக்கதையில் ஒருசில மாற்றங்கள் செய்து இந்த படத்தை இயக்க ரோஹித் ஷெட்டி திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கி வரும் 2018-ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.