shadow

லட்சக்கணக்கில் கொரோனா நோயாளிகள்: சீனாவுக்கு WHO எச்சரிக்கை

சீனாவில் லட்சக்கணக்கில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஆனால் சீனா உண்மை தகவலை தர மறுப்பதாகவும் WHO என்ற உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக சீனா உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சீனா WHO குற்றச்சாட்டுக்கு எந்தவிதபதிலும் தெரிவிக்கவில்லை