shadow

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என்றும் மற்ற நாடுகளிலும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலும் சில மாதங்களில் கொரோனா வைரஸ் மடியத் தொடங்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளது மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி மிக வேகமாக செலுத்தப்பட்டு வருவதே கொரோனா அழிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.