இன்னும் எத்தனை நாளைக்கு தல-தளபதியை நம்புவார் சிம்பு?
இன்றைய இளம் நடிகர்கள் தங்களுக்கு முக்கியத்துவமான காட்சிகள் படத்தில் இருக்கின்றதா? என்பதை விட படத்தில் எத்தனை காட்சிகளில் தல’ வருகிறார் அல்லது தளபதி வருகிறார் என்பதையே முக்கியமாக கருதுகின்றனர். உதாரணமாக சமீபத்தில் பல தடங்கல்களுக்கு பிறகு வெளியான சிம்புவின் ‘வாலு’ படத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே தல’ மயம். இது சிம்பு படமா? அல்லது ‘தல’ படமா? என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அந்த படம்.
இளையதளபதிக்கு நன்றி என்று டைட்டில் கார்டு போட்டதில் ஆகட்டும், அதன் பின்னர் ‘தல அஜீத்தின் பாடல் காட்சிகள், படக்காட்சிகள், பின்னணி இசை என்று வரும் தல’ காட்சிகளுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த கைதட்டல், சிம்பு பேசும் ஒரு வசனத்திற்கு கிடைக்கவில்லை என்பதில் இருந்து இந்த படம் சிம்புவுக்காக ஓடியதா? அல்லது தல-தளபதிக்காக ஓடியதா? என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த படத்தின் வெற்றியில் கொஞ்சம் கூட சிம்புவுக்கு பங்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தை வெளியிட தளபதியின் உதவி, படம் ஓட தல உதவி என மற்றவர்களின் உதவியினாலே பெறும் வெற்றி ஒரு வெற்றியா? தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் டி.ஆரின் மகனாக பிறந்த சிம்பு, இப்படி தன்னை நம்பாமல் தல’யை நம்பி படம் வெளியிடுவதை இனியாவது தவிர்க்க வேண்டும். சிம்புவிடம் ஏகப்பட்ட திறமைகள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தும் வகையில் படங்கள் எடுத்தால் கண்டிப்பாக ஓடத்தான் செய்யும். இனி அடுத்த படத்திலாவது அவர் அந்த முயற்சியை எடுப்பார் என்று நம்புவோம்.