shadow

முதல்வர் ஜெயலலிதா இன்னும் மருத்துவமனையில் இருப்பது ஏன். அப்பல்லோ விளக்கம்

jayalalithaகடந்த ஒரு வாரத்திற்கு மேல் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர காண்காணிப்பில் உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மேலும் சில நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கி இருக்க டாக்டர்கள் அறிவுறித்தி உள்ளனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply