முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும் நாளை முடிவு செய்வது யார்? அப்பல்லோ தலைவர் பேட்டி
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மிக வேகமாக குணமடைந்து வருவதாகவும், மிக விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் முதல்வர் வீடு திரும்பும் நாள் குறித்து இன்று பேட்டியளித்த அப்பல்லோ நிர்வாக தலைவர் பிரதாப் ரெட்டி “முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்ந்து வருகிறார்.
முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து அவரே முடிவு செய்வார். மருத்துவகுழுவின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது . மேலும் லட்சக்கணகான மக்களின் வேண்டுதலால் அவர் உடல் நலம் மீண்டு வருகிறார்” என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.