விஜய் ஓகே சொன்னால் அடுத்த நிமிடமே ‘கில்லி 2’ தயார். தரணி
எந்திரன் 2, விஸ்வரூபம் 2, சிங்கம் 3, சாமி 2 ஆகிய இரண்டாம் பாக படங்கள் கோலிவுட்டில் உருவாகி வரும் நிலையில் ‘கில்லி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறனர்.
இதனிடையே ‘கில்லி’ படத்தின் இயக்குனர் தரணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதற்கு விளக்கமளித்துள்ளார். ‘கில்லி 2’ உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கு விஜய் ஓகே சொல்ல வேண்டும் என்றும் அவர் ஓகே சொல்லிவிட்டால் அடுத்த நிமிடமே ‘கில்லி 2’ படத்திற்கு நான் தயாராகிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
விஜய்யின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று ‘கில்லி’ என்பதால் விரைவில் விஜய்யிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வரும் என கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.