‘வேந்தர் மூவீஸ்’ மதன் உயிருடன் இருக்கின்றாரா? விசாரணை அதிகாரி தகவல்
வேந்தர் மூவீஸ் மதன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிய நிலையில் அவருடைய நிலை என்ன என்பது குறித்து இன்னும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மதன் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து அவரை உடனடியாக கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி மதனைக் கண்டுபிடிக்க சென்னை காவல்துறை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மதனின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் மதன் உயிருடன்தான் இருப்பதாகவும், விரைவில் அவரை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மதன் இருக்கும் இடைத்தை நெருங்கி விட்டதாகவும் அவரை நேரில் ஆஜர்படுத்த இன்னும் ஒருமாதம் கால அவகாசம் வேண்டும்” என கோரினார். அதற்கு நீதிபதிகள், மதன் மாயமாகி 2 மாதங்களாகி வி்ட்டது. இன்னும் அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவில்லை. நாங்கள் 2 வாரம் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் மதனை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்தவேண்டும்’’ என உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.