shadow

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களின் நிலைமை என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன்

அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சிறை வைத்துள்ளதாக நேற்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை வந்தபோது, இதுகுறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் இன்று நேரடியாக கூவத்தூர் சென்றார். அங்கு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களிடம் விசாரணை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினேன். அவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்தனர். மேலும் தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தனர். எம்.எல்.ஏக்களின் எழுத்துபூர்வ ஆவணங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

கூவத்தூர் மட்டுமின்றி சொகுசு பண்ணை வீடு ஒன்றிலும் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனைய டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் கிடைக்க்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply