முதல்வர் அதிரடி அறிவிப்பு
வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் கரையை கடந்த நிலையில் அம்மாநிலத்தையே இந்த புயல் புரட்டி போட்டுள்ளது
இந்த புயல் காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் லட்சகணக்கான கோடிகள் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு கணக்கிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆம்பன் புயலால் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 2.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் ஆம்பன் புயலால் இதுவரை 72 பேர் உயிரிழந்ததாகவும் 72 பேர்களின் குடும்பத்திற்கும் இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த புயலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுடைய மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயல் கொரோனாவை விட மோசமான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.