shadow

3வது டெஸ்ட்டிலும் இந்தியாவை வீழ்த்துவோம்: தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ரபடா சவால்

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேகப்பந்து வீச்சில் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதே சமயம் இந்திய வேகப்பந்து வீச்சு மீதும் மரியாதை வைத்துள்ளோம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். அதனால் கடைசி டெஸ்டிலும் இந்திய அணியை தோற்கடித்து ‘ஒயிட்வாஷ்’ செய்ய விரும்புகிறோம்.

பேட்டிங்கில் இந்திய அணி விராட் கோலியைத்தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. அது போன்று நாங்களும் சில வீரர்களைத் தான் நம்பி இருக்கிறோம். இந்திய அணியில் தரமான வீரர்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்களில் விராட் கோலியே அதிகமான ரன்கள் குவிக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

கோலிக்கு எதிராக நான் உற்சாகமாக பந்து வீசி வருகிறேன். இப்போது அவர் உலகின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். சிறந்த வீரருக்கு எதிராக பதற்றமின்றி பொறுப்புணர்வோடு பந்து வீசுவது முக்கியமானது.

Leave a Reply