அடுத்த பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம்: தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.
இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று அடுத்த பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.
யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.