shadow

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் வாக்குப் பெட்டிகளை பிரித்து வாக்குகளை தரம் பிரித்து எண்ணிக் கொண்டிருந்தபோது ஒரு சில வாக்காளர்கள் தவறுதலாக வாக்குச்சீட்டு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை வாக்குப்பெட்டிகள் போட்டு இந்த நூதன சம்பவம் நடந்துள்ளது
குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.