தமிழக முதல்வருக்கு விஷால் கடிதம்
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவருமான விஷால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
புரட்சி தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள், நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்
நமது அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்தூள்ளது. நமது அண்டை மாநிலங்கள் செய்ததை போல தாங்களும் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வறுமையை போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து எதிர்கால விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு முதல்வருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.