shadow

சச்சின் சாதனைகளை முறியடிக்க பிள்ளையார் சுழி போட்ட விராத் கோஹ்லி

சேசிங்கில் அதிக சதமடித்த இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் என்ற சாதனையை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்தார். இன்னும் அவர் சச்சினின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் சாதனை இமாலய மலை போன்றது. அதை முறியடிக்க இன்னொருவர் வர வாய்ப்பே இல்லை என்று கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக விராத்கோஹ்லியின் ஆவேசமான ஆட்டம் இவர் நிச்சயம் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்றே தோன்றியது.

அதற்கேற்ப தற்போது சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்து பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

வெற்றிகரமாக ரன்னை சேஸ் செய்ததில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். வெற்றிகரமாக ரன் இலக்கை எடுத்ததில் அவரது 15-வது சதமாகும். (63 ஆட்டம்). இதன் மூலம் தெண்டுல்கரை (14 சதம்) அவர் முந்தி இந்த சாதனையை படைத்தார்.

Leave a Reply