ஆசிட் வீச்சில் பலியான காரைக்கால் என்ஜினீயர் வினோதினியின் தாயார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வினோதினியின் தாயார் சரஸ்வதி (வயது 44) மகள் இறந்த துக்கத்தில் தினமும் அழுதுகொண்டே இருந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதி திருக்கடையூரில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை கணவர் ஜெயபால் மற்றும் உறவினர்கள் திருக்கடையூரில். உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் சரஸ்வதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் எம்.எம்.ஜி. நகரில் வசித்து வந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களின் மகள் வினோதினி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரை திருவேட்டக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.

காதலை ஏற்க மறுத்த வினோதினி முகத்தில் சுரேஷ் ஆசிட்டை வீசினார். இதில் படுகாயம் அடைந்த வினோதினி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காரைக்கால் போலீசார் சுரேசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் காரைக்கால் கோர்ட்டில் சுரேசிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Leave a Reply