விழுப்புரம் தேரடி விநாயகர் கோவிலில் உள்ள ஷீரடி சாய்பாபா சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தேரடி விநாயகர் கோவிலில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, ஷீரடியில் இருந்து மார்பல்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட நான்கரை அடி உயரமுள்ள சாய்பாபா சிலை எடுத்து வரப்பட்டது.இந்த சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூன்று மாதத்திற்கு தினந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு, சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் ஞானபிரகாஷ், ராமலிங்கம், கலியமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.