பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை எனினும் கண்டிப்பாக பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
‘ஐ’ ரிலீஸானால் கண்டிப்பாக அந்த படத்திற்குத்தான் முன்னுரிமை கொடுப்போம் என தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்துள்ளதால் ஷங்கர் உள்பட “ஐ” படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் பொங்கலுக்கு ரிலீஸாக திட்டமிட்டிருந்த அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் விஷாலின் ‘ஆம்பள’ படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 8ஆம் தேதி ரிலீஸாகும் என்றும், விஷாலின் ‘ஆம்பள’ ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்த நிலையில் திடீரென தியேட்டர் அதிபர்கள் ‘ஐ’ படத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளதால் அஜீத் மற்றும் விஷால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.