8வது வாரத்திலும் தொடர்கிறது விஜய்யின் ‘தெறி’ வசூல்
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி எட்டு வாரங்கள் ஆகிய நிலையிலும் இன்னும் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
சென்னையில் கடந்த வாரம் ஏழு தியேட்டர்களில் ஓடிய இந்த படம் 80% இருக்கைகளில் பார்வையாளர்கள் நிரம்பியதோடு ரூ.3,48,640 வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படம் 50வது நாளை நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.11.50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இந்த வசூல் தொகை இதுவரை எந்த தமிழ்ப்படமும் செய்திராக சாதனை என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.