கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல நாட்களாக ஓய்வின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதற்காக அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிங்கப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று காலை 9.20 மணிக்கு விஜயகாந்த் தனது மனைவியுடன் சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பும் தகவல் கட்சியினர் யாருக்கும் தெரியாததால் அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை. மேலும் விஜயகாந்த், விமானத்தில் இருந்து சக்கர நாற்காலி மூலம் கொண்டுவரப்பட்டதாகவும், , அவர் ஒரு போர்வையால் தனது உடலை மூடி மிகவும் சோர்வாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விஜயகாந்த் சிங்கப்பூரில் கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு என்னவிதமான நோய், மற்றும் என்ன சிகிச்சை நடந்துள்ளது என்பது குறித்து இன்னும் கட்சியினர்களுக்கே தெரியவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.