shadow

தனித்து போட்டி. விஜயகாந்த். இல்லை இல்லை கேப்டன் தலைமையில் கூட்டணி. பிரேமலதா. தெளிவான குழப்பத்தில் தேமுதிக
vijayakanth
யாருடன் கூட்டணி என இதுவரை அனைத்து கட்சிகளுக்கும் தண்ணி காட்டி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒருவழியாக நேற்று திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை மட்டும் தெளிவாக விளக்கி விட்டார். விஜயகாந்த் தனியாகத்தான் போட்டியிடுவார் என நேற்றைய மகளிரணி பொதுக்கூட்டத்தில் அறிவித்துவிட்டார். நான் கிங் ஆகவே இருக்க விரும்புகிறேன். யாருடைய கூட்டணிக்கும் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் என்னை கூட்டணிக்கு அழைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

இந்நிலையில் விஜயகாந்த் தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நிமிடமே பிரேமலதா விஜயகாந்த் மமக்கை வாங்கி, திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக உள்ளது என்றும், கேப்டனை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.

விஜய்காந்த் தனித்து போட்டி என்றும், பிரேமலதா கேப்டன் தலைமையில் கூட்டணி என்றும் ஒரு தெளிவான குழப்ப அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்ததால் குழம்பியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, தேமுதிக தொண்டர்களும்தான் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply