shadow

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

சமீபத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் வீட்டிலேயே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து அவரது மனைவியிடம் விசாரணை செய்ய நேற்று வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். நேற்று பிற்பகல் ஆஜராக வேண்டும் என ரம்யாவுக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா ஆஜரானார்.

அவரிடம் இன்று வருமான வரித்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் இதுகுறித்த முழு தகவல் இன்னும் சில மணி நேரங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply