ரஜினிக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கும் லிங்கா பட விநியோகிஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இளையதளபதி விஜய் மற்றும் சரத்குமார் ஆகியோர்களும் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஒரு படத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் லாபம் இவை இரண்டுமே விநியோகிஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்டது. இதில் தேவையில்லாமல் நடிகர்களை இழுப்பது கண்டனத்துக்குரியது என்றும், இது ஒரு மோசமான முன்னுதாரணமாக மாறி இனி வருங்காலத்தில் அனைத்து நடிகர்களும் நஷ்ட ஈடு கேட்பதை வழக்கமாக்கிவிடுவார்கள் என்றும், அதனால் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் விஜய் மற்றும் சரத்குமார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கூடிய விரைவில் நடிகர் சங்கம் ஒரு கூட்டத்தை கூட்டி ரஜினிக்கு முழு ஆதரவு தருவதோடு, போராட்டம் நடத்தும் விநியோகிஸ்தர்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.மேலும் தற்போது போராட்டங்கள் நடத்தும் விநியோகிஸ்தர்களுக்கு தங்களின் அடுத்த படங்களின் உரிமையை கொடுக்கக்கூடாது என விஜய் உள்பட முன்னணி நடிகர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் மற்றும் சரத்குமாரின் அதிரடி நடவடிக்கையால் போராட்ட குழுவினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.