shadow

vijay biriyaniவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வரும் ‘கத்தி’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முடிந்தது. நேற்று படப்பிடிப்பு முடியும் நேரத்தில் விஜய் திடீரென படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

படக்குழுவினர் அனைவரையும் உட்கார வைத்து விஜய்யே அனைவருக்கும் பிரியாணி பரிமாறினார். சென்னையில் உள்ள புஷ்பா கார்டனில் நடந்த இந்த பிரியாணி விருந்து ஏற்பாடு பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுகே தெரியாமல் நடந்த சர்ப்பரைஸ் விருந்து என கூறப்படுகிறது. காமெடி நடிகர் சதீஷ், பிரியாணி பரிமாற விஜய்க்கு உதவினார்.

அஜீத் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நாளில் அவரே தன் கைப்பட பிரியாணி தயார் செய்து படக்குழுவினர் அனைவருக்கும் பரிமாறுவார். ஆனால் விஜய் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் ஆர்டர் செய்து பிரியாணி வரவழைத்து அனைவருக்கும் பரிமாறியுள்ளார்.

பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் சில பரிசுப்பொருட்களை பரிசாக வழங்கி அனைவரையும் இன்ப அதிர்ச்சி ஆழ்த்தினார் விஜய். அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி போட்டு தங்கள் படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வழங்குவதை அடுத்து, மற்ற முன்னணி நடிகர்களின் படக்குழுவினர்களும் தங்கள் ஹீரோவிடம் பிரியாணி கேட்டு வருவதால், அவர்களும் தங்கள் பணத்தில் இருந்து பிரியாணி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply