நடிகர் சங்க போராட்டத்தை தவிர்த்துவிட்டு, மெரீனாவுக்கு வந்த விஜய்
நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்காக ஒருநாள் அடையாள மெளன அறப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம் உள்பட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில் இதில் பங்கேற்காத ஒரே பெரிய நடிகர் விஜய் மட்டுமே
நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததால் இந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்று அதிகாலை மெரீனா போராட்ட களத்திற்கு வந்த விஜய் இளைஞர்களுக்கு தனது ஆதரவை நேரில் தெரிவித்தார்.
தனது முகத்தை மூடிக் கொண்டு போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக ஜல்லிக்கட்டுக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்ததற்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.