தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள செய்தி அனைவரும் அறிந்ததே. உடல்நிலை காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படினும் அவரது ராஜினாமாவில் மர்மம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த பதவிக்கு சீனியர் வழக்கறிஞர்களான சோமையாஜி, துரைசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
ஆனால் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி இந்த பதவிக்கு விஜய் நாராயணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.