ரஜினியை விட விஜய் பெட்டர். அமீரின் அதிரடி பேட்டி
பிரதமர் நரேந்திரமோடி ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த ஒருசில நிமிடங்களில் புதிய இந்தியா பிறந்தது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்தார். முதலில் பிரதமரின் அறிவிப்புக்கு அமோக ஆதரவு இருந்தாலும் சரியாக திட்டமிடாமல் இந்த அறிவிப்பை செய்ததால் சாமான்ய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் இந்த திட்டத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நேரத்தில் இளையதளபதி விஜய் கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இருப்பினும் சாமான்ய மக்களின் படும் கஷ்டங்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்திருந்தார். பின்விளைவுகள் குறித்து எதுவுமே யோசிக்காமல் ரஜினி தெரிவித்த ஆதரவையும், சாமான்ய மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு குரல் கொடுத்த விஜய்யின் கருத்தையும் ஒப்பிட்டு பேசிய பிரபல இயக்குனர் அமீர், ‘இந்த விஷயத்தில் ரஜினியைவிட விஜய் எவ்வளவோ பெட்டர்’ என்று கூறியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அதை ஒழிக்க வேண்டிய நடைமுறை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை உடனடியாக களையுமாறு அரசுக்கு அமீர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.