மெர்சலை முடித்தார் விஜய்? ஏ.ஆர்,முருகதாசுடன் இணைவது எப்போது?
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தின் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டதோடு, டப்பிங் பணியையும் முடித்துவிட்டாராம்
இந்த நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையமைக்கும் பணியை தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.