இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்திற்காக சென்னையில் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு செட்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து 40 நாட்கள் இரவு பகலாக இந்த செட் அமைக்கும் பணி முடிவடைந்ததும், இதில் ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய் தற்போது கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். அவர் இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் வரும் ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்பட பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார். இந்த படத்தை பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.